கெத்சமனி எனப்படுவது, தனது சிலுவைப்பாடுகளின் முன்தினம், ஒரு பலவீனமான பொழுதில், எதிர்வரவிருக்கும் துன்பத்தை எதிர்கொள்ள தன்னைத் தயார் செய்யும்படியாக இயேசு பிரார்த்தனை செய்யச் சென்ற இடமாகும். முழுமையான துயரத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் முன்பாக ஒருவன் தனக்குள் அடையும் உளைச்சலே கெத்சமனித்தருணம். எல்லாருடைய வாழ்விலும் இந்த கெத்சமனி பொழுதுகள் வந்து வந்துதான் செல்லும். ஒருவன் கெத்சமனிக்குள் பிரவேசிக்க அஞ்சினால் அவனுக்கு வாழ்தலும், மீட்பும் இல்லை. இப்புத்தகத்தின் கதை மாந்தர்கள் உங்களைத் தம் கெத்சமனித் தருணத்தினுள் அழைத்துச்செல்வர். எவர் மீதும் தீர்ப்பிடாமல், பிலாத்துவைப் போல, உங்களால் அவர்களைக் கைகழுவிவிட முடிந்தால் நலம்.
No product review yet. Be the first to review this product.