லண்டன், ஜெர்மனி தேசங்களுக்குப் போய் வந்த சூட்டோடு சுஜாதா குமுதத்தில் எழுதிய தொடர்கதை "ப்ரியா". ஒரு சினிமா நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் செல்கிறாள். அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட , அவளது கண்டிப்பான கார்டியன், லாயர் கணேஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார். லண்டனில் சதி, கொலை, கடத்தல் என அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் சிக்கித் திக்குமுக்காடும் கணேஷ், ஸ்காட்லண்ட் யார்டு போலீஸுடன் இணைந்து மிரட்டும் அசத்தலான நாவல். இது சினிமாவாக எடுக்கப்பட்டபோது ஏகப்பட்ட மாற்றங்களைச் சந்தித்து நாவலின் சுவாரஸ்யம் காணாமல் அடிக்கப்பட்டது தனிக் கதை.
No product review yet. Be the first to review this product.