மேற்கொண்டு இந்த வாழ்வை நகர்த்தத் திணறும் மனதிற்கான தத்துவச் சுடரெனப் பிரகாசிக்கின்றன இக்கவிதைகள். கனவின் நூலிலையால் அகத்தைப் பிணைத்திருக்கும் இக்காட்சிகள் ஆழ்மனப்பதிவுகளின் சாட்சியங்களாகி, வாழ்வின் பேராழத்திற்கு அழைத்துச் சென்று அதிர்வையும், திகைப்பையும் ஏற்படுத்துகின்றன. உளவியலின் உள்ளர்த்தங்களைத் தேடிப்பயணிக்கும் இப்பயணம் நிகழாதவைகளைக் கனவின் வழி நிகழ்த்தி, ஆற்றுப்படுத்திக் கொள்ளும் வெகுசாதாரண மனோநிலையைத் தடுத்து, கனவொரு வாழ்வென அழைத்துச் செல்லும் புதிய திறப்பாக அமைகின்றது.
No product review yet. Be the first to review this product.