'கழி ஓதம்' என்பது கடலின் நீர்மட்டம் உயருகிற சமயங்களில், கழிமுகங்களில் கடல்நீர் பெருக்கெடுத்துப் புகுவது ஆகும். அவ்வாறே இத்தொகுப்பில் என் மன உணர்வுகள் இந்த பன்னிரு கதைகளைக் கழிமுகமாக்கிப் புகுந்துள்ளன. என்வரையில் இக்கதைகள் எதுவும் முடிந்துவிடவில்லை. இந்த பன்னிரு கதைகளின் தொடர்ச்சியான நிகழ்வுகள், எனக்குள் உருவாகியுள்ள பன்னிரு உலகங்களுக்குள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. நீங்கள் வாசித்துமுடிக்கும்போது உங்களுக்குள்ளும் அதுபோல நிகழ்ந்தால்... உங்களுக்குள் உருவாக்கும் உலகங்களும், எனக்குள் உருவாகும் உலகங்களும் என்றாவது சந்திக்க நேரலாம். அன்று நாம் நம் உணர்வுகளால் ஒருவரையொருவர் தரிசிப்போம்!
No product review yet. Be the first to review this product.