இவ்வரலாறு, வேறெதனையும் போலின்றி, நீங்கள் நகைத்துக் கொண்டிருப்பதை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறது.
1949இல் நத்தையில் சவாரி செய்யும் அம்பேத்கரை சாட்டையால் விளாசும் ஜவஹாலால் நேருவை சித்தரிக்கும் சங்கரின் கேலிச் சித்திரம், பள்ளிப் பாட நூலில் சேர்க்கப்பட்டிருந்தது தலித் எதிர்ப்பை கிளப்பிற்று. கலையின் சுதந்திரம் என்ற ரீதியில் சவர்ணர்கள் எதிர்வினையாற்றினர். அப்போது ஆய்வு மாணவரும் கேலிச்சித்திரருமான உண்ணாமதி சியாமா சுந்தர், ஆங்கில மொழி அச்சுப் பதிப்புகளில் வெளியாகியுள்ள, அம்பேத்கர் குறித்த கேலிச் சித்திரங்களை ஆவண காப்பகங்களில் தேடிச் சேகரித்தார். சங்கர், என்வெர் அகமத், ஆர்.கே. லட்சுமண் உள்ளிட்டவர்கள் வரைந்து, இந்தியாவின் முன்னணி பிரசுரங்களில் வெளியாகியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கேலிச்சித்திரங்கள், அம்பேத்கர் மீதான வக்கிரமானதும் சிந்தனையற்றதுமான காழ்ப்புணர்வை அப்பட்டமாக்கியிருப்பது தெரிய வந்தது. ஒவ்வொரு கேலிச்சித்திரத்துடன் இணைந்துள்ள கடுமையான விமர்சனக்குறிப்பு, வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்டவரின் அசலான வாழ்க்கை வரலாற்றினை முன்வைக்கிறது.
No product review yet. Be the first to review this product.