இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இதற்குமுன் நமக்குப் பழக்கமான கதை சொல்லலுக்கு இன்னும் இடம் இருக்கிறதா? இல்லை என்பது தான் ஜி. காரல் மார்க்ஸின் இந்தக் கதைகளை படிக்கும் போது ஏற்படும் முதன்மையான உணர்வு. ஒருவிதத்தில் இவை கதைகளற்ற கதைகள். மனிதர்களின் விசித்திரமான கோட்டுச் சித்திரங்கள், மூட்டமான மனநிலைகள், தற்காலிகமான தருணங்களின் வானவில்கள், அபத்த நிலைகள் தரும் உலர்ந்த தன்மை.