சரித்திரம் முழுதும் ரத்தம். எப்போது வேண்டுமானாலும் யுத்தம். ஆயிரக் கணக்கான தீவிரவாதச் செயல்பாடுகள். குண்டு வெடிப்புகள், உயிர்ப்பலி, நினைத்த போதெல்லாம் ஊரடங்கு. 'நாங்கள் இந்தியர்களும் இல்லை; பாகிஸ்தானியரும் இல்லை; காஷ்மீரிகள்' என்னும் கோஷம், பிரிவினைப் போராட்டங்கள் தனி. காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் வசம் இருக்கிறது. அங்கே ஏன் இந்தக் கோஷங்களும் போராட்டங்களும் இல்லை? யுத்தங்கள், சமரசங்கள், பேச்சுவார்த்தைகள், நல்லெண்ண முயற்சிகளுக்குக் குறைவில்லை. ஆனால் இன்றுவரை பிரச்னை தீர்ந்தபாடில்லை. காஷ்மீர் உண்மையிலேயே தீர்க்க முடியாத பிரச்னைதானா? காஷ்மீர் பிரச்னையின் முழுமையான வரலாறை விவரிக்கும் இந்நூல், இதைப் பிரச்னையாகவே வைத்திருக்கும் அரசியலின் ஆழங்களையும் ஆராய்கிறது.
No product review yet. Be the first to review this product.