Skip to product information
ஆரிய மாயை
Rs. 150.00
Author: அறிஞர் அண்ணா
Publisher Name : Ethir Veliyeedu
‘ஆரிய மாயை’ எனும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சியுரைகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது. மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன. (படிக்க மட்டுமேயன்றிப் பிறருக்கு விஷய விளக்கமாற்றவும், சந்தேகங்களைப் போக்கவும், மாற்றாரின் எதிர்ப்புரைகளுக்கு மறுப்புரை தரவும் இந்நூல் பெரிதும் பயன்படும் என்று கருதுகிறேன். பேச்சாளருக்குப் பேருபகாரியாக இந்நூல் இருக்கும்.)
ஆரிய ஆதிக்கத்திலிருந்து திராவிட நாடு விடுபட வழிவகை கோலுவோருக்கு இந்நூல் எழுச்சியூட்டும் என்பது என் நம்பிக்கை. திராவிடத் தோழர்கள் இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன்.
- சி.என். அண்ணாதுரை