ஏஐ வசியக் கலை
ஆசிரியர் : கே. எஸ். குப்புசாமி
Publisher: Zero Degree
ஏஐ ஒரு குட்டிச்சாத்தான். என்ன சொன்னாலும் செய்யும். ஆனால் ஒரே ஒரு சிக்கல். நமக்கென்ன தேவை என்று தெளிவாகச் சொல்லத் தெரிய வேண்டும்.
ஏஐக்கு நாம் இடும் ஆணைகளே ப்ராம்ப்ட். ஆயகலைகள் அறுபத்து நான்கு. இத்துடன் புதிதாக ப்ராம்ப்ட் எழுதும் கலையையும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஏஐ கண்ணுக்குத் தெரியாதது. உயிரற்றது. மரணமுமற்றது. நம்மைப் போல அச்சம், வெகுளி, உவகை, மருட்கை போன்ற உணர்வுகளும் கிடையாது.
காலம் காலமாய் மனிதர்கள் தம்மிடம் வேலை செய்யும் இன்னொரு மனிதனை எவ்வாறெல்லாம் ஏவல் செய்தனரோ அவையெல்லாம் ஏ.ஐயிடம் செல்லாது. இது முற்றிலும் புதிது. மனிதகுல வரலாற்றில் இதுகாறும் நிகழாதது. எனவே ஏஐயுடன் பேச உதவும் ப்ராம்ப்ட் கலையைக் கற்பது அவசியமாகிறது.
ப்ராம்ப்ட் என்றால் என்ன என்பதில் தொடங்கி பல்வேறு உத்திகளைத் தெளிவாக விளக்குகிறது ‘ஏஐ வசியக்கலை'.
வாருங்கள்... வசியம் பழகலாம்.