கலைஞரின் இலக்கிய ஆளுமை
ஆசிரியர் : இரா.அறவேந்தன்
Publisher: சாகித்திய அகாதெமி
முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் திருக்குவளை எனும் சிற்றூரில் பிறந்தவர்; வசனகர்த்தா பத்திரிகையாசிரியர் எழுத்தாளர் அரசியல்வாதி முதலமைச்சர் எனப் பன்முக ஆளுமை வாய்ந்தவர் நாவல் சிறுகதை கவிதை கட்டுரை கடிதம் நாடகம் திரைவசனம் எனப் பல்வேறு இலக்கிய வகையில் சுமார் ஒரு லட்சம் பக்க அளவிற்கு எழுதியவர். சமநிலையும் சமூக நீதியும் சமூகத்தில் மலர வேண்டுமெனத் தன் எழுத்துப் பயணத்தை வரையறுத்துக் கொண்டவர். இவர்தம் நூற்றாண்டை முன்னிட்டு சாகித்திய அகாதெமிக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவருகிறது. இந்த நூல், கலைஞரின் ஒட்டுமொத்தப் படைப்புலகில் காணலாகும் இலக்கிய ஆளுமையை வெளிக்கொணர்ந்துள்ளது; எதிர்கால இலக்கிய உலகிற்கான கை விளக்காகவும் திகழ்கிறது.