மெட்ராஸ் வணிகரின் சீன மனைவி
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
நூலாசிரியர்: சூ டிஷான்
மொழிபெயர்ப்பாளர்: ஈஸ்வரி
சூ டிஷான், சீனாவில் பரவலாக அறியப்படும் எழுத்தாளர். 1920களில் அவர் எழுதிய இந்த மூன்று கதைகள், சீனாவின் புதிய கலாசார இயக்கத்தில் அறிவியலும் வெளிப்படையான கருத்துக்களும் பரவியிருந்த காலத்தில் அவருடைய தனிப்பட்ட பார்வையை பிரதிபலிக்கின்றன. இந்தியத் தத்துவத்தால் ஆழந்த பாதிப்புக்குள்ளான அவர் மதத்தின் மீட்டெடுப்புச் சக்தியை முக்கியமாகக் குறிப்பிடுகிறார். “வணிகனின் மனைவி” (ஷாங்ரென் ஃபு) கதையில், மலேசியா சென்ற சீனப் பெண், மெட்ராஸில் ஒரு முஸ்லிம் வணிகரிடம் விற்கப்பட்டு, இந்திய மொழிகளையும் மதங்களையும் கற்று ஆன்மிக விடுதலை அடைகிறாள். பிற கதைகள் மனிதர்களுக்கும் சமூகத்துக்கும் விதிக்கும் இடையிலான உறவுகளைப் பற்றியது. தனிமனிதர்கள் விதியுடன் போராடி வாழ்வதை இக்கதைகள் ஆராய்கின்றன. சீன - தமிழக வரலாற்றுத் தொடர்புகள் பெரும்பாலும் இராஜதந்திரம், வர்த்தகம் சார்ந்தே அமைந்திருந்தன. இந்தக் கதைகள் அந்தக் காலகட்டத்தில் சீனா, இந்தியா, தெற்காசியாவுக்கு இடையிலான தொடர்புகளைப் புரிந்துகொள்ள உதவும்.