நீல குண்டுபல்பு
Author: ஷங்கர்ராமசுப்ரமணியன்
Publisher Name : Ethir Veliyeedu
திட்டவட்டமான கருத்திலிருந்து திரவமாய் வழியும் காட்சிகளை நோக்கி, ஆளுமைகளில் குணங்களில் ஆட்படுவதிலிருந்து விடுபட்டு வெறும் பெயர்களை நோக்கி, நாரோ இழையோ இல்லாமல் விடுபூக்கள யே, அரூபமாலையாக்கிப் பார்க்கும் சொற்சித்திரங்களை நோக்கி,உக்கிரமும் சன்னதமும் கூடி, தன்போக்கிலேயே என்னைச் சுழித்து அழைத்துச்சென்ற திட்டம் குறைந்த கவிதைகள் இவை. சிறிய அச்சானிய உணர்ச்சியையும் ஏற்படுத்தலாம். ஆழ்மனத்தில் புதைந்திருந்த சிறுவயது நினைவுகளும் கோலங்களும் இப்போது இந்த வயதில் துல்லியமாகத் தம்மைத் திறந்துகொண்டு எனக்குப் பரிமாறின. எனக்கு விருப்பமான பெண்களைப் பூனைகளாக ஆக்கி, அவர்களால்கூட அடையாளம் காணவியலாத அளவுக்கு அரூபமாக்கி, இத்தொகுப்பில் அலையவிட்டிருக்கிறேன். அழகியதொரு பழி.