நிழல்முற்றம்
களம் சார்ந்த கதைகள் தமிழுக்குப் புதிதல்ல. திரைப்படங்களைக் காண்பதற்கான ஒரே
வழிமுறையாகத் திரையரங்கங்கள் இருந்த காலத்துத் திரையரங்க வளாகம் ஒன்றைச்
சுற்றி எழுப்பப்பட்டுள்ள ‘நிழல் முற்றம்' என்னும் நாவலின் களம் தமிழ்ப் புனைவுலகிற்குப்
புதியது. எழுதி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மங்காமல் ஒளிவீசும் புதுமை இது.
சிறு நகரம் ஒன்றின் திரையரங்க வளாகத்தில் புழங்கும் மனிதர்களும் அங்கு நிகழும்
வாழ்வின் சலனங்களும் ஒரு காலகட்டத்தையும் குறிப்பிட்ட இடத்தையும் சார்ந்த தமிழ்
வாழ்க்கையின் குறுவடிவமாகவே தோற்றம் கொள்கின்றனர்.
மாய நிழல்கள் அசையும் திரையைச் சுற்றிலும் இயங்கும் யதார்த்த வாழ்வு ஓராயிரம்
திரைப்படங்களுக்கான கருக்களைச் சுமந்திருப்பதை இந்தச் சிறு நாவல் காட்டுகிறது.
Language :Tamil
Author : பெருமாள் முருகன்
Publication : காலச்சுவடு பதிப்பகம்