போரின் கலை
சாணக்கியரின் 'அர்த்த சாஸ்திரம்', மாக்கியவெல்லியின் 'இளவரசன்' போன்ற நூல் வரிசையில் சன் ஸூவின் ”போரின் கலை” காலத்தால் அழியாத முக்கியமான நூலாகும்.
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சன் ஸூ என்ற சீனப் போர்முறை, இராணுவ உத்திகள் குறித்து எழுதிய நூல்தான் “போரின் கலை”.
அக்காலத்தில் அனைத்து மட்டங்களிலான இராணுவமும் சன் ஸூவின் போதனைகளைப் போருக்குப் பயன்படுத்தி வந்தன. பல நூற்றாண்டுகளாக இராணுவ ஆர்வலர்கள், வணிகத் தலைவர்கள், வியூகச் சிந்தனையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான நூலாக இருந்திருக்கிறது.
தற்போதைய நாகரிக, தொழிற்நுட்ப வளர்ச்சியிலும் இந்த நூலின் தேவை குறையவில்லை. அரசியல், வணிகம், அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடிய ஆலோசனையை இந்நூல் வழங்குகிறது. இன்றைய கார்ப்ரேட் அலுவலகத்தின் தலைமைத்துவம் வளர்த்து, அதில் வெற்றியை அடைவது குறித்த காலத்தால் அழியாத பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது.