Skip to product information
வேல்
Rs. 230.00
வளர்ப்பு விலங்குகள் இந்திய வீடுகளுக்குள் நுழைந்ததும் குடும்ப உறவுகளில் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அவற்றைப் நுட்பமாகவும் பருண்மையாகவும் புரிந்துகொள்ள முடிகிறது. வளர்ப்பு விலங்குகளால் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள், மாற்றங்கள் குறித்து எழுத எவ்வளவோ உள்ளன. இத்தொகுப்பு மூலமாகச் சில கதைகளை உங்கள் முன் வைக்கிறேன்.
பூனைகளுக்கும் நாய்களுக்கும் மனிதக் குணங்கள் ஏறுவதை அல்லது ஏற்றுவதை நகைச்சுவையாகச் சில கதைகளிலும் காத்திரமாகச் சில கதைகளிலும் எழுதியிருக்கிறேன். மனித உறவுகள் நிழலாகி மனித-வளர்ப்பு விலங்கு உறவு பெரிதாகிவரும் சித்திரத்தை இக்கதைகள் கொண்டிருக்கின்றன.
இக்கதைத் தொகுப்பு என் எழுத்துக்களில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
-பெருமாள்முருகன்
Language :Tamil
Author : பெருமாள் முருகன்
Publication : காலச்சுவடு பதிப்பகம்