எழுத்தாளர் கந்தர்வன் வாழ்ந்தது அறுபது ஆண்டுகள். அதுபோலவே அவரின் கதைகளும் 62 மட்டுமே. ஆனால் நவீன தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்பவர். பூவுக்குக் கீழே, ஒவ்வொரு கல்லால், அப்பாவும் அம்மாவும் கொம்பன் ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து மிகுந்த கவனத்தைப் பெற்றன. சிறுகதைகள் மட்டுமல்லாது ‘‘கந்தர்வன் கதைகள்’’ என்று கவிதைகளிலும் தனி ஆளுமை செலுத்தியவர். ‘கவடி’ என்ற குறுநாவலும் எழுதியுள்ளார்.
Skip to product information