மனிதகுல வரலாறு Manithakula Varalaru
எழுத்தாளர் : ஏ.எஸ்.கே
பதிப்பகம் : Valari Veliyeedu
உலகில் பெரும் பகுதி மக்கள் சமய நம்பிக்கை, கடவுள் வழிபாடு, மூடப்பழக்கவழக்கங்களின் காரணமாக அறியாமையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். சமுதாய மாற்றத்திற்கு தடைக்கற்களாக ஜாதி இருக்கிறது. இந்த மூடப்பழக்க வழக்கங்களை அறவே ஒழித்து, மனித சமுதாயம் மேம்பட இந்த நூல் உதவுகிறது.
இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையும் திரும்ப, திரும்ப வாசித்து நினைவில் வைத்துக் கொள்ளும்படியான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. பல நூல்களை ஆதார நூல்களாக ஒரே நூலில் வடித்திருக்கும் ஆசிரியரின் திறன் வியக்கத்தக்கது.
நூல் ஆசிரியர் ஏ.எஸ்.கே அவர்களின் பன்முகத்தன்மையை “மனிதகுல வரலாறு” ஆக தொகுத்துள்ளது, எதிர்வரும் மனித குலம் தன் வரலாற்றை அறிவியல் கண்ணோட்டத்தோடு அறிந்து கொள்ள மிக முக்கியமான நூலாகும்.