Skip to product information
முள்ளிப்புல்
Rs. 150.00
Author: ச. துரை
Publisher Name : Ethir Veliyeedu
எல்லா திசைகளையும் உரசியபடி முள்ளிப்புல்லொன்று நிலத்தில் ஓடுவதைப் பார்த்தேன். முதலில் அதுவொரு கால்பந்தை போலத் தெரிந்தது. சிறிது நேரத்தில் விசித்திரமான கடல் பிராணியாகத் தோன்றியது. அடுத்த கணமே அது எனது தலையைப் போலானது. இப்போது இந்தக் கரை முழுக்க உருண்டு ஓடுவது எனது தலையென நினைக்கும் போதே அந்த உதிரி முள்ளிப்புல் தூரத்திலொரு புள்ளியாகிக் காற்றில் பறந்து காணாமல் போனது. நான் நம்புகிறேன் காணாமல் போன எனது தலை முணுமுணுப்பதாக, ரகசியமாகப் பாட்டு பாடுவதாக, முடிவற்ற இந்தக் கடலைப் பார்த்து எல்லோருக்குமான வானத்தைப் பார்த்து எப்போதாவது உரக்கக் கவிதை வாசிப்பதாக...