சொல் என்றொரு சொல்
Author: ரமேஷ் - பிரேம்
Publisher Name : Ethir Veliyeedu
எல்லாத் திசைகளிலும் கதைகளால் நிரம்பி வழியும் தமிழ்ப் பரப்பு, கதைகளினூடாக எல்லாப் பரப்புகளிலும் பரவிவிட்ட தமிழ் மனம். இரண்டும் சந்திக்கும் தளத்தில் மூண்டுக் கிளைக்கிறது தமிழ் நினைவு.
தமிழ் மனம் கட்டமைந்த கதைகளூடாகவும் தமிழ் மனதைக் கட்டமைக்கும் கதைகளூடாகவும் உருவாகிறது இன்றைய பின்நவீனத்துவப் பிரதி.
சில கதைகளால் கட்டப்படும் தமிழ் மனம்தான் வேறு கதைகளால் கட்டவிழ்க்கவும் படுகிறது என்கிறது இந்நாவல்.
கதைசொல் முறைகளும் பொருள்கோள் முறைகளும் நிகழ்த்தும் ஓயாத கதைக் களப் போர்ப் பரப்பிற்குள் என்னவாக உருவாகிறது அல்லது என்னவாக உருவழிகிறது கலாச்சாரத்தின் விளைவான மனம் என்பதை கதையாக்கப் பரிசோதனை மூலமே ஆய்வுக்குள்ளாக்கும் இந்நாவல் தமிழின் அகமரபுக்கும் புறமரபுக்கும் இடையூடாக ஓடும் ஒரு குறியியல் நாவலாகவும் கதையாடல்கள் பற்றிய கதையாடல்களின் நாவலாகவும் அமைந்திருக்கிறது.
தமிழின் பிரதியியல் மரபுகளையும் சிறு மரபுகளையும்
இடையீடாகக் கொண்டு சொல்லப்படுகிறது
சொல் என்றொரு சொல்