Skip to product information
தெற்கு ஜன்னல்
Rs. 230.00
Author: ந. சிவநேசன்
Publisher Name : Ethir Veliyeedu
துயரங்களிலிருந்து கற்கிற அனுபவங்களை வெளிச்சொல்ல முடியாமல் அவதிப்படுகிற அடிப்படை மனிதர்களின் துன்பம் எழுத்தாளனுக்கு நேர்வதில்லை. கலைகளில் ஒன்றான எழுத்தின் வழியே அவற்றை மடைமாற்றிவிட்டுத் தன் மனதைச் சுமையற்றதாக வைத்துக் கொள்கிற வாய்ப்பு அவனது பேரதிர்ஷ்டம். அப்படித்தான் எனக்கும் லேசாகி மிதக்கிற வாய்ப்பை இக்கதைகள் தந்திருக்கின்றன.
இலக்கியத்தில் அசோகமித்திரன் காலத்திலிருந்தே அவல நகைச்சுவைக்குத் தனி இடமுண்டு. நான் அப்படியான பாதையொன்றில் பயணிக்க முயன்று தோற்றிருக்கிறேன். பிறகு முயன்று இங்குள்ள சில கதைகளில் அவற்றைக் கொண்டும் வந்திருக்கிறேன். மேலும் விளிம்புநிலை மனிதர்களின் அகப்பாடுகளை மிகையற்று யதார்த்தப் பூச்சோடு இங்கு எழுதியிருப்பதாக நம்புகிறேன்.