Skip to product information
உயிர்பெறும் புனைவுச் சித்திரங்கள்
Rs. 130.00
எழுத்தாளர் : அரவிந்தன்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
அரவிந்தனின் இக்கட்டுரைகள் எளிமையான தோற்றத்திலிருக்கும் பிரம்மாண்டமான உலகத்தின் சொற்கள். படைப்பு, படைப்பாளி, வாசகர், வாசிப்பு, மொழி, நூலகம் முதலான இலக்கியச் செயல்பாடுகளின் அக, புறக் கூறுகளை இக்கட்டுரைகள் அலசுகின்றன, படைப்பின் வியத்தகு அம்சங்களை நடைமுறை வாழ்வுடன் இணைத்துப் பேசும் கட்டுரைகளுடன் மொழியைப் பற்றிய நுட்பமான, கூர்மையான அலசல்களும் உள்ளன. சொல் தனக்கு முன்னும் பின்னுமாகக் கொண்டுள்ள அரசியலையும் தத்துவத்தையும் அறிந்துகொள்ள உதவக்கூடிய கட்டுரைகளைக் கொண்ட நூல் இது.